Why do Tamilians become intolerant when they are asked to learn Hindi?

[From what I wrote in Quora]

I am one of those proud intolerant Tamilian, who gets irritated when some illiterate so called nationalist come up with ‘Hindi is our national language’ crap. These are the reasons(which we Tamilians are telling you folks for 60+ years and we’ll keep on saying until you fed up):

1. India is a not a ‘Nation’. Use this link to understand the difference. And when India is not a nation it obviously need not to speak one language. ‘Unity in Diversity’ is what we have been thought from our childhood and but we don’t use that phrase just for the sake of it. Instead we use – ‘one nation, one language, one religion’. Look into the history and see what Vallabhai patel and Nehru did to ‘create’ this country. All the press around the world were writing “India is the greatest social experiment ever done”. It means this country has been brought together under one umbrella, as an experiment, with 40 crore Indians back then. It is/was the greatest social experiment and we Tamilians feel proud of that.

2. ‘While you’re in Rome be a Roman’. Yes we Tamilians don’t hesitate to speak in Hindi in a Hindi speaking state. I am from a town called Sivakasi in Tamilnadu, which is famous producing crackers. Sivakasi is one of the largest supplier of fire crackers to the entire country and people from my town travel all over India to get orders for crackers. And 99% of them speaks fluent Hindi and many other prominent languages. Were they thought in the school? Of course not, it is practice and it is ethics of doing business. If you move to a new place for your business, then you should learn the local language and speak to them in their language – that is ‘being a roman’. We follow that without anyone teaching or reminding us regularly. But what happens when a North or west Indian lands in Tamilndau? The first words would be – ‘Why you guys don’t speak Hindi?’. In any way this is ethical?

3. The greatest myth – ‘Hindi is our national language and you SHOULD learn and speak it’. For the millionth time we’re requesting you to read something on this and come up with proof. Here is one of the proofs on why Hindi is NOT our national language. If India is not a national language, then obviously it cannot have a national language.

4. ‘Tamilians do not know Hindi. They hate it and they’re not thought as well’ – really? No, I studied Hindi in a private Tuition and also in school. I passed four exams in hindi prachar sabha. I can read/write/speak Hindi fluently. 90% of my Tamil friends know Hindi, atleast to the point that they can listen and respond. 30% Tamilians in my current workplace knows Hindi and often they brag about their Hindi fluency as well. Actually I like Hindi, especially as songs. It is one of the beautiful Indian languages and its poetic nature is heart-warming. I speak to Hindi folks only in Hindi when I am in their states like MP, UP, Delhi etc.. I love to learn their slangs as well. It is unique and fun to learn.

5. ‘Tamilians are intolerant’. Hell no. You have not seen real Tamilians. We, as any other society have accepted changes and evolved really well. See the total non-Tamil population in Chennai – which one of the largest populated city in Tamilnadu(1 of every 7th person in TN lives here). Also see the other parts of the state where Telugu people lives heavily. It was Madras presidency before Independence and we had people from all 5 southern states lived here. All southern Indian films were shot in Chennai. For every rupee we pay as tax, we only get 0.44 Rs. And we’re very well aware about it that UP gets more than 4 Rs in equivalent. But nobody complains here, because we know that UP was and is feeding us with their Rice & wheat for a long while and they’re one of the developing states.

6. We’re intolerant with Hindi being forced on us really hard when it is of no use to us. Yes it is no use to us. Early during 80’s and 90’s it was mentioned that ‘Learning Hindi would land you a job in North or West India, so learn it’. But what happened really, the entire North population is migrating to south India now. Banglore, Hydrebad, Chennai – look everywhere you can see people from all parts if India. People migrating to another place in search of economic prosperity. North Indians come to TN and asks us to learn Hindi. Really isn’t this hilarious. If you come to a new place, then you should learn the local language. It is not us who’re coming to your place and intolerant to learn your language. But instead it is you who’re intolerant to learn something new. And this migration is going to be severe in future due to many effects like population, climate etc.. and entire south India is ready to ‘accept’ other parts of India, but you should speak our language. This is not all from a patronizing point of view. This is totally from a ‘self-respect’ view. We don’t hurt anyone else’s self-esteem nor do we let someone hurt ours.

நானும் சாமியாரும்

சுவாமி சரவண-பபா

ஆமா இப்டி ஒரு சுவாமி இருக்கார்.
போன வருடம் கார்த்திகைக்கு நண்பர்கள் அழைத்தார்களென Zurich-Adiswil லிலுள்ள முருகன் கோவிலுக்குப் போனேன். Cultural anthropology பிடிக்குமாதலால் எல்லா வழிபாட்டுத்தழங்களும் அல்வா துண்டுகளே.

இவ்வளவு தமிழ்க் குடும்பங்கள் இங்கே உள்ளனர் என்றும், இங்குள்ள ஹிந்து அமைப்புகளிடையே வலுவான Nexus இருப்பதும் அங்கிருப்பவர்களைப் பார்த்ததும் புரிந்தது.

கோவிலுக்குள் பூஜை தொடங்குமுன்னர் எல்லோரும் நின்று பேசிக் கொண்டிருந்தோம். திடீரென சலசலப்பு ‘சாமி வர்றார், வர்றார்’ என. அனைவரும் ஒதங்கி ஓரமாய் நிற்க, இந்தியாவில் இருந்து வரவைக்கப்பட்ட சில பெரிய parcelகள் உள்ளே எடுத்துவரப் பட்டது. இன்னும் சில உள்ளன எடுத்துவர உதவுமாறு கேட்டார் ஒரு பக்தர். ‘எங்கிட்டயேவா?!’ என நினைத்துக் கொண்டு , வடிவேலு ஒரு படத்தில் ‘தள்ளு தள்ளு தள்ளு’ ன்னு பஸ்ஸைத் தள்ளுவது போல பாவளா காட்டி எல்லா parcelலும் இறக்கி வைக்கப்பட்டன.

சிறிது நேரத்தில் சாமியார் உள்ளே வந்தார். தாடி வைத்து, ஜடா முடியுடன், பல ருத்ராய்ச்ச மாலைகளுடன், பயங்கர serious முகத்துடன் வருவார் என கற்பனை செய்து வைத்திருந்தால் – வந்ததோ clean shaven (both face and head), அம்சமான ஒரே ஒரு ருத்ராச்சத்துடன், புன்னகை பூத்த முகத்துடன், பட்டுச் சேலையை நான்காய் மடித்து துப்பட்டாவாய் போட்டுக் கொண்டு கையில் மயிலிறகுடன் ஓர் ஆசாமி.

நான் சுதாரிப்பதற்குள் சாமியார் தன் ஆசனத்தில் அமர(கோவிலில் chair போட்டு உட்காரலாமானு தெரிந்தவர்கள் சொல்லவும்) என்னையும் கூட்டத்தில் அமர வைத்தனர்.

கூட்டம் தொடங்க, ஒருவர் மாற்றி ஒருவராக சாமியாரைப் புகழ்ந்து தள்ளினர்.ஒருவர் ‘இவர் முருகனின் அவதாரம்’ என்றார். அதைக் கேட்டுத் தானாய் சிரித்தபடி, மயிலிறகுடன் விளையாடிக் கொண்டிருந்தார். உண்மையில் அனைவர் பேசும் போதும் விளையாடிக் கொண்டே தான் இருந்தார் அந்த அவதாரம்(அதான் பால முருகன்னு சொல்லியாச்சே -justification to the role).

தீடீரென சாமியார் எழுந்து கூட்டத்தினூடே நடக்கத் தொடங்கினார். மணி இரவு 8 ஆகி இருந்த வேலையில், கொட்டாவி விட்டுக் கொண்டிருந்த போது, யாரோ தலையில் தடவுவது போல் இருக்க; திரும்பிப் பார்த்தால் சாமியார் எல்லார் மேலும் மயிலிறகால் வருடியபடி செல்கிறார்.

பின்னர் அனைவரும், வாய் ஓய்ந்திருக்க; ஆரம்பமானது சாமியாரின் அருளுரை. நான் எல்லா மதத் தலைவர்கள்/அடிப்படைவாதிகளின் உரையையும் கேட்பதுண்டு. நாம் அறியாத பல தகவல்களை எளிய மொழியில் புரிய வைத்துவிடுவர் சிலர். எனவே, ஆழ கவனிக்கத் துவங்கினேன். இறைவனை வணங்கி foreplay முடித்து matter லுக்குள் நுழையுத்தார் சாமி, நான் ஐந்தே நிமிடத்தில்  வெளியேறி விடலாம் என எழுந்தேன்; நண்பர்கள் அமுக்கி உட்கார வைத்தனர். ஒரு சாமியாருக்கு stuff இருக்குதான்னு பார்க்க 5 நிமிடம் போதுமானது. ஜக்கி ஒரு classic example. ஜக்கி போன்று திறமையாகத் தன் தாய் மொழி அல்லாத மொழியில் ஒருவர் அழகாய்ப் பேசுவது மிகக் கடினம். ஜக்கி அதில் வல்லவர், போக அவருடைய பல்துறை ஆழமான அறிவு சமயத்தில் வியக்க வைக்கும். ஆனால் இந்த ஆசாமியோ அருளுரை என்ற பெயரில் தரும் கொடுமையான உபதேசங்கள், மிகுதியாய்க் கடுப்படித்தன.

எழுந்து ஓடவும் முடியாமல் இருபுறமும் நண்பர்கள். கோவில் வாசலும் பூட்டப்பட்டு இருந்தது. புதைகுழியில் விழுந்தால், துள்ளாமல் அமைதியாய் இருந்து பின்னர் மேல் உடம்பை மட்டும் குனிந்து நகர்ந்து தப்ப வேண்டும் என்று எங்கோ படித்தது நினைவுக்கு வந்தது. கையில் செல்பேசியை எடுத்து sudoku ஆட ஆரம்பித்தேன். சிறிது விளையாட்டு, சிறிது சாமியாரின் மொக்கை என 2 மணி நேரம் கடந்தது.

அடுத்து விளக்கு பூஜை. ஒரு paper தட்டு, மண் விளக்கு, ஒரு திரி எல்லோருக்கும் வழங்கப்பட்டது. பெரிய 2 liter பாட்டிலில் எண்ணெய் எடுத்து வந்து ஒவ்வொரு விளக்காய் ஊற்றினார் ஒரு பக்தர். விளக்குகள் ஏற்றப் பட்ட பின்னர், மின்விளக்குகள் அணைக்கப்பட்டன. மயான அமைதி, விளக்கெண்ணெய் வாசம், சுவரில் ஆடிக் கொண்டே தெரிந்த கருநிழல்கள். பாட ஆரம்பித்தார் சாமியார். பக்தர்களும் நானும் பாட்டை உற்று கவனித்தோம். சுதியைக் கூட்டினார்; கூடம் அதிர்ந்தது. அங்க வந்திருந்த ஐரோப்பியர்களில் ஒருவர் கண்ணில் கண்ணீர்! பக்தர்கள் மெய் மறந்தனர். நான் அனைத்தையும் அசை போட்டு யோசித்துக் கொண்டிருந்தேன். பாடல்கள் முடிந்தன. அடுத்து ஸ்லோகங்கள் சாமியார் சொல்ல, மற்றவர் சொல்லத் துவங்கினர். நேரம் ஆகிக் கொண்டே  இருந்தது. எவரும் கோவிலில் இருந்து வெளியேற முயலவில்லை. சிறு குழந்தைகளும் அடக்கி வைக்கப் பட்டனர். விளக்கு பூஜை முடிந்து மின்விளக்குகள் மீண்டும் போடப் பட்டன. சாமியார் எங்களை எழச் சொன்னார். மயக்கத்தில் இருந்து தெளிய முடியாமல் சில கால்கள், நெளிந்து எழுந்து நின்றன. விளக்கை மீண்டும் ஒரு இடத்தில் surrender செய்தோம்.

பிறகு, பெரிய சத்தத்துடன் வந்து ஸ்லோகத்தை திரும்பாத திரும்பச் சொன்னோம். சாமியாரே கலைப்பாகி இருந்தார் அப்போது. அமர்ந்து கொண்டார். Vote of thanks சொல்லி ஒருவர் முடித்து வைத்தார். மணி நடுநிசி 12.00 ஆகி இருந்தது(கோவில் இவ்வளவு நேரம் திறந்திருக்கலாமா?).

போகலாம் bus இருக்காது இதுக்குப் பிறகு, என வெளிய வந்து விட்டோம். shoe போடும் பொது தலைமை பக்தை ஒருவரிடம் மாட்டிக் கொண்டோம். ‘எங்க போறீங்க.. சாமிய தரிசனம் பண்ணிட்டு போங்க’ என கையைப் பிடித்து வலுக்கட்டாயமாக உள்ளெ இழுத்துச் சென்றார். அதற்குள் சாமியாரைப் பார்க்க பெரிய வரிசை காத்திருந்தது. எங்களைக் கூட்டி வந்தவர் முக்கியமானவர் போல. நேரே சாமியாரின் secretary போன்ற ஒருவரிடம் சென்று ஏதோ சொன்னார்; உடனே நாங்கள் அந்தப் பெரிய வரிசையின் முதலில் நிறுத்தப் பட்டோம். எனக்கு என்ன நடக்கும் எனத் தெரியாது. ரெண்டாவது ஆளாய் நின்று கொண்டிருந்தேன். என்னவந்தாலும் பாத்துக்கலாம் என்ற திமிர் தான் நிக்க வைத்தது. ஆனால் என் முன்னாள் நின்றிருந்த நண்பர்  படக்கென்று சாமியார் காலில் விழுந்து விட்டார். தாய் தகப்பன் காலிலேயே விழாத எனக்கு; சுயமரியாதை மட்டுமே என் தகப்பனார் விட்டுச்சென்ற சொத்து என மெதப்பொடு சுத்திக்கொண்டிருந்த நான், நண்பர் சாமியார் காலில் விழுந்ததும் வெலவெலத்துப் போனேன். ‘நானும் விழுந்தே ஆக வேண்டுமோ?’ அந்த தலைமை பக்தை எங்களுக்கு ஆசி வாங்கிக் கொடுக்கும் மும்முரத்தில், நான் காலில் விழ மறுத்தால் கழுத்தைப் பிடித்து விழ வைப்பர் போல் இருந்தது. பின்னே நிற்கும் பெரும் கூட்டம் எங்களையே பார்த்துக் கொண்டிருந்தது.

நண்பர் காதில் சாமியார் ஏதோ முணுமுணுக்க நண்பர் ஆதவன் கண்ட தாமரையாய் மலர்ந்தார். அடுத்து நான். ‘போச்சி, இன்னைக்கு பஞ்சயாத் ஆகாம போகாது’ ன்னு நினைக்கும் போதே நண்பர் எழுந்த செல்லவும், சாமியார் திரும்பி யாருடனோ பேசவும் சரியாய் இருந்தது. கன நொடி தான்; என்ன நினைத்தேனோ வேகமாய் நண்பரோடு நானும் வரிசையை விட்டு விலகிச் சென்றேன். நின்னைத்தது போல சாமியாரின் அடிபொடிகள் ‘எங்க போறீங்க? சாமிட ஆசிர்வாதம் வாங்கிட்டு போங்க என்று மூன்று பேர் பிடித்துத் தள்ள, நான் மீண்டும் வரிசையில் !!!!

சாமியார் என்னை நோக்கித் திரும்பினார். பின்னால் நின்றவர்கள் என்னை சாமியார் அருகில் தள்ளிச் சென்றனர். நான் சாமியாரைப் பார்க்க, அவர் என்னை பார்க்க; நான் படித்த பகுத்தறிவு, அறிவியல், மானுடவியல், உளவியல் புத்தகங்கள் கண் முன்னே வந்து சென்றன. பெரியார், Richard Dawkins, Sam Harris நமட்டுச் சிரிப்பு சிரிப்பது போல் சத்தம் காதுகளில். நான் தர்க்கம் செய்த இறையடியார்கள் சத்தமாகவே சிரித்தனர்.

சாமியார் முன் நிமிர்ந்தே நின்றேன். கையில் ஒரு ரோஜா பூ மற்றும் எலுமிச்சையை திணித்து கையைப் பிடித்து இழுத்து என் காதுகளில் ஏதோ சொன்னார்- ‘பழனி மழைக்கு வா உனக்கு நல்லதே நடக்கும்’. நான் சிரித்துவிட்டு நிமிர்ந்து நடந்து சென்றேன். மனதில் பெரும் மகிழ்ச்சி. மானம் போகமா இருந்ததை எண்ணி.

2  அடிஎடுத்து வைக்க வில்லை, ஒரு உண்டியல், ஒரு குங்குமம் வய்த்த ஒரு ஆசாமி. ‘சுவாமி மட்ல ஆதரவற்ற குழந்தைகளை படிக்க வைக்கிறோம். உங்களால் முடிந்த உதவி பண்ணுங்க’. நான் கொடுக்க வில்லை. இன்னுமொரு 2 அடி. சாமியார் மடத்தின் Mini Store திறக்கப்பட்டிருந்தது. சாமியார் படம் போடப்பட்ட அனைத்தும் அங்கே விற்பனைக்கு இருந்தன. நான் வாங்கவில்லை எதையும். அடுத்த 2 அடி, கோவில் பூசாரி கையில் தட்டுடன் நின்று கொண்டிருந்தார். இவை அனைத்தும் கடுந்து நண்பரைத் தேடினால், அவரோ இன்னும் முதல் உண்டியலிலேயே நின்று கொண்டிருந்தார். நன்கொடை கொடுத்ததாகப் பிறகு சொன்னார்.

எங்கள் நண்பர்கள் நால்வர் இந்த ‘தரிசனம்-நன்கொடை’ routine முடித்து வெளியே வர 10 நிமிடம் ஆகியது. பின்னர் சாப்பிட வேண்டும் என்ற கட்டாயம். சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தோம். ஒரு பணக்கார இலங்கைத் தமிழர் எங்களை வீட்டில் drop செய்யக் காத்திருந்தார்(தலைமை பக்தையின் அன்பு). அலுங்காமல் இரவு 1.30 மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம்.


இதைப் போன்ற சாமியார்களை நான் இந்தியாவில் நெருங்கக் கூட முடியாது. பெரிய பணம் கொடுக்க வேண்டும், இல்லை பலியாய் காத்துக் கிடைக்க வேண்டும். ரெண்டுமே கொடுமை. இல்லை மிகவும் முக்கிய/முக்காத பிரபலமாக இருக்க வேண்டும். ஆனால் இங்கே நான் இரண்டாம் ஆளாக வரிசையில் நிற்க முடியும், என்னை வீடு கொண்டு சேர்க்க சொகுசுக் கார், அருமையான உணவு. இது என் சுமாரான முகம் பார்த்தல்ல, swiss franc பார்த்து. இந்த சாமியார்கள் spiritual tour செய்கின்றனர். வருடம் ஒருமுறை ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று. இந்த சாமியாரின் மடம் கேரளாவில் உள்ளது.இவர் ஐரோப்பா tourஇல் இருந்தார் அந்த சமயத்தில். ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, சுவிற்சர்லாந்து இவை நாளும் அவர் இணைய calendar இல் இருந்தன.

ஒரு நாட்டில் 50 ஹிந்துக் குடும்பங்கள் என வைத்துக் கொண்டாலும், ஒரு குடும்பம் 100 Euro நன்கொடை + விற்பனை செய்தாலும் 5000. 4 நாடுகள் என்றால் 20,000 euros. அதாவது 14 லட்சம் இந்திய ரூபாயில். ஒரு tour 14 லட்சம் என்றால் 3 tour 42 லட்சம் – வெறும் 15-20 நாட்களில். இவை வெறும் குறைவான மதிப்பீடே. வருமான வரியில் இந்தப் பணம் வராது. ‘சாமி கண்ணைக் குத்தும்’ என்று யாரும் கணக்கும் கேட்க மாட்டர்.

இது போன்ற famous ஆகாத சாமியார்களை அறிமுகம் செய்யும் மனிதர்களைக் கவனித்தால் ஒன்று புரியும். ஒரு புதிய சோப்பை சந்தையில் விற்கும் தொனியை அவர்களால் தவிர்க்க முடியாது. போதா குறைக்கு அந்த சாமியாரே அவரைப் பற்றி இதற்கு முன் கேள்விப்பட்டிராத புதிய பட்டங்களை/ அவதாரங்களைத் தருவார் அந்த அன்பர்.

இந்தக் கூட்டங்களை அமைத்துத் தரும் பக்தர்களுக்கு, இது ஒரு பரமானந்தம். தமிழகத்தில் நீங்கள் அடிக்கடிப் பார்க்கும் கிறிஸ்துவ இறையடியார்கள் போலவே, உலகம் முழுக்க ஹிந்து இறையடியார்கள், கூட்டம் சேர்க்க வேண்டும் என்ற முனைப்பில், தேனொழுகப் பேசுவர்; கையை பிடித்து வம்படியாக அனைத்திற்கும் அழைப்பர். நாம் மலைக்கும் அளவிற்கு நமக்கு சகாயம் செய்வர்.

இந்தச் சாமியாரின் வரலாறு மிகக் comedy ஆனது. இவருக்கு இப்பொழுது வயது வெறும் 37 மட்டுமே. கேரளத்தில் பிறந்த இவர், பள்ளிப் படிப்பை பாதியில் விட்டுவிட்டு திருச்சி வந்து ஒரு விடுதியில் waterboy ஆகா பணிபுரிந்துள்ளார். பின்னாட்களில், அந்த விடுதி உரிமையாளரின் மனைவியின் துணையுடன் பல பூஜை/புனஸ்காரம் எனச் செய்து famous ஆகிறார். அப்பொழுது கிடைத்த முக்கிய contacts காரணமாக பணமும் பேரும் கிடைக்கிறது. சின்ன ஆசிரமம் அமைக்கிறார் கேரளத்தில். கேரளா சாமியார் + தமிழ் கடவுள் முருக அவதாரம், என இரு மாநிலத்து ஆட்களும் தேடி வரத் தொடங்க; ஆசிரமம் பெரிதாகிறது. உலகம் முழுக்க தரிசனம் பெற பக்த கொடிகள் தவமிருந்து அழைக்கின்றனர். லட்சங்களிருந்து கோடிகளில் புழங்கத் தொடங்குகிறார். பள்ளி, குழந்தைகள் ஆதரவு, முதியோர் ஆதரவு என நன்கொடைகள் கொட்டுகின்றன. இன்று இந்திய சாமியார்களின் இரண்டாம் அல்லது மூன்றாம் வரிசையில் உள்ளார். விரைவில் முதல் வரிசையில் வர வாய்ப்புள்ளது.

இம்மாதிரியான சாமியார்களின் சொத்து மதிப்பு எப்போதுமே underestimate செய்யப்படுகிறது. சாய் பாபா இறந்த பின் அவர் அந்தரங்க locker room இல் இருந்து எடுக்கப்பட்ட தங்கமும் வைரமும் அதற்க்கு உதாரணம். இவர்கள் வருமான வரியில் சிக்கவே மாட்டர் . இவர்களை கேள்வி கேட்கும் அதிகாரிகள் விலைக்கு வாங்கப்படுவர்; அரசியல்வாதிகள் விலை பேசப்படுவர். மக்கள் முழுமையாக நம்புவர்; எதிர்ப்பவர்கள் சாத்தான்களாகப்படுவர். ஆக, இவர்களுக்கு எதிரிகள் இன்னொரு சாமியாரக இருக்க முடியும் அல்லது இவர்கள் நெருங்கிப் பழகும் அரசியல்வாதிகளின் எதிரிகளாய் மட்டுமே இருக்க முடியும். மற்றவர் இவர்களது அறையில் camera வைத்து CD வெளியிட்டாலே ஒழிய; ஒன்றும் செய்ய முடியாது.

கருணை மற்றும் பயம்; இவை இரண்டுமே இந்த ‘வியாபாரத்தில்’ பெரிய மூலதனம். அதை அறுவடை செய்ய இந்த வித்தகர்கள் நன்கு பழகி இருப்பர். “ஒரு விஷயம் நம்புற மாதிரி சொல்லனும்னா உண்மையும் பொய்யும் கலந்து இருக்கனும்” என்ற ‘சதுரங்க வேட்டை’ வசனத்திற்கிணங்க இவர்கள் சொல்வதில் உண்மையும் இருக்கும் பொய்யுமிருக்கும். எதை எடுக்க வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும், என்பது அவரவர் திறமை சார்ந்தது.

ஆனால் இங்கே  God – sells all the time,  என்பதில் ஐயமில்லை.

தொடரும் ‘தேசிய மொழி’ விவாதம்

இந்தி திணிப்பு, தேசிய மொழி, ஒற்றை மொழி கொள்கை  எனப் பல மாநிலங்களில் மொழி சார்ந்த விவாதங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு முறையும் மொழி ரீதியான ஒடுக்கு முறைகள் திணிக்கப்படும் போது, இவ்விவாதங்களின் வீரியம் வழுக்கும். ஆனால் முற்றாய்  தீர்வு வந்த பாடில்லை. இந்தப் பதிவு ‘தமிழ் மட்டுமே செம்மொழி’, ‘எம்மொழி போன்று வேறில்லை’; என்று மார்தட்டி மற்ற மொழி தூற்றும் முயற்சி அல்ல. அன்றி, தாய்மொழி என்பதின்  முக்கியத்துவம் மற்றும் கூட்டாச்சியில் மொழிகளின் நிலை  போன்றவற்றைக் குறித்தே. தமிழ் ஒரு உதாரணமாகவே எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது .

hindiதமிழ்நாட்டைப்  பொறுத்த வரை தமிழ் அல்லாத எந்த மொழியும் தேசிய மொழி என்ற அடையாளத்தைப் பெற வாய்ப்பில்லை. எனினும் தாய் மொழியே முதலானது என்ற தமிழர்களின் கருத்து தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கப் பட்டும், கேளிக்குள்ளாக்கப் பட்டும் விவாதங்கள் குற்றச்சாட்டாக முன் வைக்கப்படுகிறது.

தமிழர்களும், இந்தி எதிர்ப்பை தீர்க்கமாக முன் வைக்கும் பிற மாநிலத்தவரும் ஏன் ‘தேசிய மொழி தேவை’  என்ற சித்தாந்தத்தை ஏற்க மறுக்கின்றன?

இந்தியா தேசங்களின் தேசம். இதை ஒற்றை தேசமாகச் சித்தரிக்கும் முனைப்பு தேசிய கட்சிகளிடம் தொடர்ந்து இருந்து வருகிறது. நோக்கம் பலவாறாக இருந்து வந்திருக்கிறது. பொதுக்கருத்து எனப் பார்த்தால் ‘நாம் ஒற்றை தேசமாகி விட்டோம், இனி மாநிலங்களுக்கிடையே ஆனா தொடர்புகள் ஒரு ஒற்றை மொழியிலேயே இருத்தல் அவசியம். இந்தி பெரும்பாலான மாநிலத்தவர் பேசுகிறார்கள் அதனால் அதையே ஒற்றை மொழியாக வைத்துக்கொண்டால் செயல் திட்டம் எளிதாகி விடும்’, என்பதே.

ஆனால் அடிப்படைச் சிக்கல் 6-8 மாநிலங்கள் மட்டுமே இந்தி பேசிகிறார்கள். அவர்கள் எண்ணிக்கையில் பெருகி இருக்கலாம். ஆனால் மற்ற மொழிகளின் செழுமையும், வகைமையும், அம்மொழிகளைப் பேசுகிறவர் எண்ணிக்கையும் அதிகமாவே இருக்கின்றன. ஆட்சி மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டு, மொழி எதிர்ப்பு போராட்டங்கள் வெடித்து, பின்னர் 15 ஆண்டு கழித்து இந்தி ஆட்சி மொழி ஆகலாம் என்ற கொள்கையை காங்கிரஸ் அரசு கைவிட்டு, வெறும் சில மாநிலங்களால்  மட்டுமே  இப்போராட்டத்தில் கைகொடுகப்ப் பட்டு தமிழ்நாடு ஒரு வெற்றிக் களைப்பில் தனிமைப் படுத்தப் பட்டது. தூசி வாரி சபித்தவர் பலர். இத்தனை கோபங்களுக்கு இடையிலும் நாம் செய்த போராட்டம் வெறும் மொழிக்காக மட்டும் இல்லை; நம் வேர்களுக்கே.

சரி, பொதுத் சிந்தனை என்பது திணிக்கப் பட்டதே. அரசியல் லாபங்களுக்குகாக புத்திசாலிகளால் மக்களின் மனத்தில் ஆழமாய்ப் பதிய வைக்கப்படும் எளிமையான கருத்துக்களே. இவற்றை ஏன் இவ்வாறு கொண்டு சென்று மக்களிடம் சேர்க்க வேண்டும்? லீக் வான் யூ  ஒரு முறை இந்தியா வந்திருந்த போது  அவரிடம் ஒரு IAS அதிகாரி கேட்ட கேள்வி – “இன்று உங்களிடம் இந்தியாவைக் கொடுத்தால் சிங்கப்பூர் போன்று அதை உங்களால் மாற்ற முடியுமா?’. லீக் வான் யூ ஒரு நேர்மையான புத்திசாலி. அவருடை பதில் மிகத் தெளிவாக இருந்தது – “இந்தியா பலமுகம் கொண்ட நாடு. தனி மனிதர் ஒருவரால் இந்தியாவை மாற்றிவிட முடியாது. பஞ்சாபி பேசும் ஒரு பிரதமரை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள முடியாது. சீனாவில் 90% ஒரே மொழி பேசுவோர் இருப்பதனால் அது சாத்தியப்படலாம். இந்தியா தன வரையறைகளை மீறவே முடியாது. இது வெள்ளையரின் கடுமானத்தில் உருவான நாடு; இந்த சவால்களுடன் தான் நாம் இதை அணுக வேண்டும்” என்றவர் மேலும் கேள்விக்கான பதிலில், “நாங்கள் சிங்கப்பூரை அனைவரும் சமாகப் போட்டியிடும் ஒரு களமாகத் தொடங்கினோம், ஆங்கிலத்தை பொது மொழியைத் தேர்ந்தெடுத்தது…யாருக்கும் அது சாதமாக இல்லை.”

இவ்வாறு ஒரு நாடு(country) உருவாகும் பொழுது, பலதரப்பினரும் சேர்ந்து வாழும் சூழல் நேருமாயின்; யாருக்கும்  சாதகமற்ற ஒரு சமமான இயங்கு தளத்தை அமைத்தல் அவசியம். இந்தியாவை நிர்மாணித்த நேருவின் கீழான ஆட்சி இதையே செய்தது.லீக் வான் யூவே ஏற்க மறுக்கும்  – அனைவருக்கும் ஓட்டுரிமை, என்பதை எடுத்த எடுப்பில் இந்தியா நிறைவேற்றியது என்பதே அதற்கு சாட்சி. இந்தியா ஒரு கூட்டமைப்பாகவே இருக்க, இந்த அரசியில் அமைப்பு பல வசதிகளைச் செய்துள்ளது. அவ்வசதிகளாலேயே நாம் இன்று பல தளங்களில் உரக்க கேள்விகளைக் கேட்க முடிகிறது.இவையின்றி, சாதி மத இனப் பூசல்கள் உள்ள இந்த நாட்டில் வாய்திறக்க quota வைத்திருப்பார் சிலர்.

ஹிந்தியைத் தூக்கிப் பிடிக்கும் பலர் ஐரோப்பிய நாடுகள் செல்லும் போது ஆங்கிலம் கூட மறந்து அந்நாடுகளின் மொழிகளை குறை சொல்லாமல் ஏற்றுக் கொள்கின்றனர். பல சமயங்களில் வேலை நிமித்தமாய் அம்மொழிகளைக் கற்றுக்கொள்ளக் கூடத் தயங்குவதில்லை. ஆனால் சென்னைக்கு பிழைப்புத் தேடி வரும் இதே வகையைச் சேர்ந்த பலர் ஆட்டோ ஓட்டுனருக்குக் கூட ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும் என எதிர் பார்ப்பது – ஒரு மொழியின் அதிகாரத்தையே காட்டுகிறது(கொழுப்பையும் கூடத் தான்).

ஒரு மொழி வளர முக்கியக் காரணிகள் அதன் பொருளாதாரம் மற்றும் அதிகாரம். ஜெர்மன், ஜாப்பனீஸ், இத்தாலியன், பிரெஞ்சு, ஆங்கிலம் எனப் பல உதாரணங்களில் அம்மொழிகளைப் பேசும் கூட்டம் பொருளாதாரத்திலோ அதிகாரத்திலோ தொடர்ந்து தன்னை முன்னிலைப் படுத்திக் கொண்டுள்ளது. ஹிந்திக்கும் இது பொருந்தும். ஹிந்தி பேசும் இந்த ஆறு மாநிலத்தவர் இன்று பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இடங்களை நிரப்புகின்றனர். அதிகாரம் அவர்கள் கையில் உள்ளது. ஆனால் ஹிந்தியை திணிப்பதில் அவர்கள் தோற்பது இதே இடங்களை நிரப்புப்பும் பரபரப்பில் தான். மற்ற மொழி பேசும் மாநிலங்களும் இதற்கு ஈடான இடங்களை பெற்றுள்ளன.ஐரோப்பிய நாடுகளில், அம்மொழிகள் அந்நாட்டவரின் ‘தேசிய’ மொழிகள் என்று வாதிட்டு, ‘அதனால் அதை ஏற்கிறோம்’ என்றால் ; இந்தியா தேசமா(nation) இல்லை நாடா(country) என்பது தெரிந்திருக்க வேண்டும். இந்தியா ஒரு நாடு (country), தேசம் (nation) அல்ல. தமிழ்நாடு ஒரு தேசம், கேரளம் ஒரு தேசம், ஆந்திரம் ஒரு தேசம், மாராட்டா ஒரு தேசம். இவைகள் அடங்கிய ஒரு கூட்டமைப்பு(union) தான் இந்தியா. இவற்றை அங்கீகரித்தே 22 ஆடசி மொழிகள் இங்கு உள்ளன. பாராளுமன்றத்தில் தமிழில் பேச முடியும் என்றால், அவைக் குறிப்பில் பேசியது இடம்பெறும் என்றால்; சென்னை சென்ட்ரலிலும் தமிழில் பேச முழு உரிமை உள்ளது.

மேலும் ஒரு முக்கியமான காரணி – பொருளாதாரம். இந்த ஆறு மாநிலங்கள் மகாராஷ்டிரா,கேரளா, ஆந்திரம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களோடு ஒப்பிட்டால் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளன.இவை தொழில் வளம் பெற்று முன்னுக்கு வரும் பட்சத்தில், ஹிந்தி திணிப்பு மேலும் மூர்க்கமாக இருக்கும்.

விவாதம் 2ஆம் பகுதியில் தொடரும்..

கபாலிகள் நமக்கு ஏன் தேவை.

திரையரங்குகளிலும், மக்கள் மத்தியிலும் கபாலி ஜுரம் அடக்கினாலும் இணையம் முழுவதும் இன்றளவும் தொடர்ந்து விவாதக்களனாகவே உள்ளான் கபாலி. மாற்றுக் கருத்துக்கள், சண்டைகள், வம்புகள் என இப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் கிழித்துத் தொங்கப் போட்ட நிம்மதியில் பலர் அடங்கக் காத்திருந்தேன். சற்றே அடங்கியது என்றளவில், இந்தப்பதிவை எழுதுகிறேன். இது பட விமர்சனம் அல்ல.

இப்படம் நல்லா இருந்தது, இல்லை என்பதையெல்லாம் மீறி ஒரு சமூகப் படமாக கபாலி விட்டுச்சென்ற செய்திகள் சில உண்டு. இச்செய்திகளை கவனித்தவர்களை விட கேட்காமலும், கேட்டும் கவனிக்காதவர்களும், கவனித்தும் மறுதலித்தவர்களுமே அதிகம்.இச்செய்திகள் தினமும் எதோ ஒருமூளையில் முனக்கிக் கேட்டிருப்போம்; ஆனால் அதை உறக்கப் பேச ஒரு உச்ச நட்சத்திரம் தேவைப்படுகிறார். நம்மிடையே இருக்கும் பெரும் பலவீனம் யார் பேசுகிறாரோ அவரின் வேர்களை கேளி செய்வது. அவை அழுக்காக இல்லை என்றாலும் கரைப்படுத்திக் கேளி செய்தல் நம் மரபு. இவ்வகையில் இப்படத்தின் மையப்புள்ளிகள் அனைவரையும் கேளிப்பொருட்களாக்கி நிம்மதி உற்றார் பலர்.

முதல் செய்தி – இது தலித் அரசியல் பேசும் படம் அல்ல. இது மலேசியா-வாழ் தமிழர்கள் ஒடுக்கப்பட்ட வரலாற்றின் பின்னணியில் கதை நாயகனின் கதை பேசும் படம். ஒடுக்கப்பட்ட என்பது இங்கே மொழி மற்றும் நிறம் சார்ந்து சித்தரிக்கப்பட்டுள்ளது. வீரசேகரன் பேசும் ஆண்ட பரம்பரை சார்ந்த வசனங்கள் மற்றும் 2 பாடல் வரிகள் தவிர தமிழ்ச்சூழல் சாதி அரசியல் நேரடியாகப் பேசப்படவில்லை. ரஞ்சித் என்ற ஒற்றை நபரை முன்னிருந்தி இப்படம் அதை தான் பேசியது என்று குறியீடுகளாய் அடுக்குகின்றனர். அம்பேத்கரை கவனித்தவர்கள் சேகுவேராவை ஏன் கவனிக்கவில்லை. இந்தத் தொடர்ச்சி ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தில் குரல் எழுப்பிய புரட்சியாளர்கள் உளர் அதன் நீட்சியே இந்தக் கபாலி என்பதாய்தானே உள்ளது?! மக்களை ஒடுக்க காரணங்கள் பல உண்டு. அது நடந்து கொண்டே இருக்கும். இன்றே பட்டியல் இனத்தவர் மேல்சாதி என்று அறிவிக்கப்பட்டு நிலவுடைமையராய் ஆக்கப்பட்டாலும்; அதிலிருந்து பலனடைந்த சிலர்/பலர் மற்ற சாதியினரை ஒடுக்கவே முற்படுவர். பெண் சுதந்திரம் என்ற பெயரில் ஆண்களை ஒடுக்க முனையும் பெண்களை இன்று பார்க்கிறோம். ஒபாமா பதவி ஏற்ற பொழுது – “இனி எல்லாமே நாங்க தான்” என்று பொதுவெளியில் கொக்கரித்த கருப்பு இன மக்களைப் பார்த்தோம். இவ்வாறு இங்கே தடி எடுத்தவெல்லாம் தண்டல் காரனாய் மாறி மற்றவரை ஒடுக்க தயார் ஆகின்றனர். ‘ஒடுக்கப்பட்ட’ என்பதற்கு ஒற்றை அர்த்தம் கற்பிக்கத் தேவையில்லை. அவை ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறிக்கொண்டே வருவது.ஒவ்வோர் நில/இன/மொழி பேதம் அனைத்தும் இந்த ஒடுக்குமுறைகளின் வெவ்வெறு பரிமாணங்களை கண்டுவிட்டன. ஒடுக்குபவன் எங்குமே ஒடுக்குமுறையைப் பேச மாட்டான், எவன் அதில் வருந்துகிறானோ அவனே பேச வேண்டும், என்பதுவே உண்மையான செய்தி.

இரண்டாவது, அரசியல் மற்றும் அதிகாரம். ஒரு குழுவின் முன்னேற்றம், விடுதலை என்றுமே அதன் அரசியல் அதிகாரத்தில் மட்டுமே மையம் கொண்டுள்ளது. அதிகாரம் அற்ற சமூகம் ஒரு நிலையில் மற்றவர்க்கு அடிமைப்பட்டே தீரும். அந்த அதிகாரம் நம் தலைமுறைகளை தீர்மானிக்கிறது. அவர்களது தற்சார்ப்பைத் தீர்மானிக்கிறது. என்னால் அடிமையாய் இருக்க முடியாது என்ற நிலைப்பாட்டை ஒரு மனிதன் எடுக்கும் போது, அவன் தன் சந்ததியை விடுவிக்கும் தொடக்கப்புள்ளியில் உள்ளான்.இந்தியாவில் பல சாதிகள் இவ்வாறு முன்னேறியவையே. நம் வேலை/கல்வி இட ஒதுக்கீடு, தேர்தலில் ஒதுக்கப்பட்ட தொகுதிகள் என நடைமுறையில்  இருக்கும் பல, இந்த அதிகாரத்தின் பங்கீட்டுக்காகவே.

மூன்றாவது – ரஞ்சித் கூறிய முக்கியமான செய்தி. கபாலிகள் ஓட்டக்குப்பட்ட சமூகத்தில் பிறப்பது வேலைக்காகாது; அன்றி ஒடுக்கும் சமூகத்தில் இருந்து வர வேண்டும். இவர்களாளேயே சமூக இணக்கத்தின் உரையாடல் தொடங்கும். அது வரை மற்ற கபாலிகள் கதறினாலும் கேட்க எவரும்  இருக்கமாட்டார். பல மட்டங்களிலும் இந்த கபாலிகள் தொடர்ந்து இயங்கினாலே ஒழிய சமத்துவம், சுயமரியாதை, மனிதம் என்ற சொற்களுக்கு அர்த்தம் இல்லை என்றே அனுமானித்துக்கொள்வோம்.

இன்று உலகமே சமமாய் உள்ளது என்ற மாயையில் சாதி-ரீதியான இடஒதுக்கீட்டை எதிர்ப்பது, பொருளாதாரத்தில் பின்னடைந்தவர்களை நசுக்குவது, மொழி/இன வன்மையான கேளிகள் எனத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இவற்றை தடுக்க ஒன்றல்ல பல கபாலிகள் தேவை.

மீண்டும் – கபாலி என்பது ஒரு குறியீடு மட்டுமே.

வாழ்க்கைத் தரம் – 1

இந்தியா ஒரு சிக்கலான கூட்டமைப்பு. இச்சமுகத்தில் என்றுமே மக்களின் வாழ்க்கை தரம் சமமாக உயரவோ தாழ்ந்ததோ இல்லை. விவசாய சமுகமாய் இருந்து இன்று சந்தைப்  பொருளாதாரச் சமுகமாய் உருமாறி உலகத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு நாடு, தன் மக்களின் வாழ்க்கைத் தரத்தை  எப்படி வைத்திருக்கிறது?

வாழ்க்கைத் தரம் – உலகம் முழுவதிலும் இன்றும் இது சமமற்றே இருக்கிறது. நாடுகளுக்கிடையே இந்த வளர்ச்சியை Hans Rosling குறிப்பிடும் பொழுது தன் முந்தைய தலைமுறைக்கு கிடைக்காத ஒரு பொருள் இந்தத் தலைமுறைக்கு கிடைத்தால் அதுவே முக்கியமான வளர்ச்சிக் கூறு. மேலும் இந்தத் தரம், குழந்தை இறப்பு விகிதம் குறையும் பொது பெரிதாய் வளர்ச்சி அடிக்கிறது என்கிறார். இவ்விகிதம் பெண்கள் கருவுறும் விகிதத்தையும் நேரடியாய்ப் பாதிக்கும். இந்தியாவின் குழந்தை இறப்பு விகிதம் – உலக வங்கியின் மதிப்பீட்டின் படி ஒவ்வொரு 1000 குழந்தைக்கும் 48 குழந்தைகள் 5 வயதிற்குள் இறக்கின்றன. இது தனியே பார்த்தால் ஆப்ரிக்க நாடுகளுடன் ஒப்பிடும் அளவில் இருக்கிறது (ஆப்ரிக்க நாடுகள் இந்தக் குறியீட்டில் அசுர வளர்ச்சியடைந்திருக்கிறது). ஆனால் நாம் வெகுவாக வளந்திருக்கிறோம். இந்த வளர்ச்சியின் விளைவாய், பெண்கள் கருவுறும் விகிதமும் குறைந்து 2.5ய் உள்ளது.
SoL - Copy

இந்தியாவின் மக்கள் தொகை மேற்கூறிய இவ்விரண்டு கூறுகளால் எளிதில் புரிந்துகொள்ள  முடியும். நம்முடைய மக்கள் தொகையை சுமையாக பார்த்த காலம் மலையரிப்போய், இன்று இளமை ததும்பும் ஒரு நாட்டை, உலக அரங்கில் பெரும் சந்தையாகவும், ஒரு வேலைச் சமுகமாகவும் மாற்றி இருக்கிறது. இந்த மாற்றம் வாழ்க்கைத் தரத்தை பெரிதும் பாதிக்கும். ‘பாதிக்கும்’ என்றால் பாதகமாகவும் மாறலாம்.

Maslow’s hierarchy of needs என்பது ஆபிரகாம் மாஸ்லோ என்ற அமெரிக்கரின் தேவை மற்றும் முன்னேற்றத்திற்கான கோட்பாடு. மனிதம் குறித்தான முக்கியமான கோட்பாடுகளில் இதுவும் ஒன்று. ஒரு சமுகத்தின் வாழ்வாதாரம், முன்னேற்றம் மற்றும் உக்கதிர்க்கும் கூட இந்த பிரமிட்-ஐ உபயோகிக்கலாம்.

மாஸ்லோ இந்த pyramidஐ வடவைமைத்ததன் நோக்கம் வேறு; ஆனாலும் நாம் இதை ஒரு தனி மனித மற்றும் சமுகத்தின் முன்னேற்றம் என்ற ஒரு பரிணாம வளர்ச்சியை ஆராயப் பயன்படுத்தலாம்.

இந்தியாவைக் கீழிருந்து அலசலாம். அடிப்படைத் தேவைகள் நிறவெறியிருக்கிறதா?
உணவுத் தட்டுப்பாடு பசுமைப் புரட்சியில் தீர்ந்தது என்று வாதிடும் அதே நேரத்தில் இந்தியாவில் விவசாயத் தற்கொலைகள் நடந்ததிற்கு கரணம் என்ன என்ற கேள்வியையும் வைத்தே ஆகா வேண்டும். இவை இரண்டும் தொடர்புடையைவையே. இந்தத் தொடர்ச்சியை அரசாங்கங்களும் நிறுவனங்களும் மறுத்தே வரும், அது நேரான விளைவே.  நிலவுடைமை, நிலத்தின் மீதான வரி மற்றும் மோசமான நீர் மேலாண்மை போன்ற ஆங்கிலேய காலத்து காரணிகளைத் தாண்டி விவசாயக் கடன், பூச்சிக்கொல்லிகள் மற்றும் முறையற்ற சந்தை என  புதிய காரணிகளின் அடிமை ஆகிப் போன நம் விவசாயச் சமுகத்தினரே இந்த கடைசித் தளத்தில் முதன்மையானவர்கள். இவர்களில் பெரும்பான்மையானோர் குறு விவசாயிகள் மற்றும் கூலித் தொழிலார்கள். இவர்களது நகர்ப்புறத்து வடிவமாய் எளிய வேளைகளில் மட்டுமே வாய்ப்பளிக்கப்படும் நகரத்திற்கு வசிக்கும்/புலன்பெயர்ந்த தொழிலாளர்கள். ஆதிவாசிகள், பழங்குடியினரும் இந்தத் தளத்தில் வருவர்.

இவர்கள் அனைவருக்கும் உணவு, தண்ணீர், கழிவறை, ஆரம்ப சுகாதாரம், வீடு போன்றவை கிடைத்து விடாதா என்றால் இல்லை. பொது விநியோகத் திட்டத்தில் இருக்கும் அலட்சியப் போக்கு, உணவு விரையம் மற்றும் பாதுகாப்பான உணவுக்கிடங்குகள் இல்லாமை போன்றவை Global hunger indexயில் இந்தியாவை  முதல் 25 இடங்களில் வைத்துள்ளது.(India(2015) – GHI – 29). India’s Warehousing Development and Regulatory Authorityயின் தகவல் – இந்தியா 13% GDPயை உணவை பாதுகாப்பான கூடங்களில் வைக்க முடியாதலால் விரயம் செய்கிறோம் என்கிறது. WHO இந்தியாவின் ஒழுங்கற்ற பொது விநியோகத்தை ‘ஆபத்தானது’ என்கிறது. பசுமைப் புரட்சியில் அடைந்ததைக் கருதும் அனைத்தையும் நாம் பல வழிகளில் இழந்து மக்களைப் பட்டினியாய் வைத்திருக்கிறோம்.

1024px-Maslow's_Hierarchy_of_Needs.svg

மாஸ்லோ இந்த pyramidஐ வடவைமைத்ததன் நோக்கம் வேறு; ஆனாலும் நாம் இதை ஒரு தனி மனித முநேர்த்ரம் மற்றும் சமுகத்தின் முன்னேற்றம் என்ற ஒரு பரிணாம வளர்ச்சியை ஆராயப் பயன்படுத்தலாம்.

இந்தியாவைக் கீழிருந்து அலசலாம். அடிப்படைத் தேவைகள் நிறவெறியிருக்கிறதா?
உணவுத் தட்டுப்பாடு பசுமைப் புரட்சியில் தீர்ந்தது என்று வாதிடும் அதே நேரத்தில் இந்தியாவில் விவசாயத் தற்கொலைகள் நடந்ததிற்கு கரணம் என்ன என்ற கேள்வியையும் வைத்தே ஆகா வேண்டும். இவை இரண்டும் தொடர்புடையைவையே. இந்தத் தொடர்ச்சியை அரசாங்கங்களும் நிறுவனங்களும் மறுத்தே வரும், அது நேரான விளைவே.  நிலவுடைமை, நிலத்தின் மீதான வரி மற்றும் மோசமான நீர் மேலாண்மை போன்ற ஆங்கிலேய காலத்து காரணிகளைத் தாண்டி விவசாயக் கடன், பூச்சிக்கொல்லிகள் மற்றும் முறையற்ற சந்தை என  புதிய காரணிகளின் அடிமை ஆகிப் போன நம் விவசாயச் சமுகத்தினரே இந்த கடைசித் தளத்தில் முதன்மையானவர்கள். இவர்களில் பெரும்பான்மையானோர் குறு விவசாயிகள் மற்றும் கூலித் தொழிலார்கள். இவர்களது நகர்ப்புறத்து வடிவமாய் எளிய வேளைகளில் மட்டுமே வாய்ப்பளிக்கப்படும் நகரத்திற்கு வசிக்கும்/புலன்பெயர்ந்த தொழிலாளர்கள். ஆதிவாசிகள், பழங்குடியினரும் இந்தத் தளத்தில் வருவர்.

இவர்கள் அனைவருக்கும் உணவு, தண்ணீர், கழிவறை, ஆரம்ப சுகாதாரம், வீடு போன்றவை கிடைத்து விடாதா என்றால்…..இல்லை.

பொது விநியோகத் திட்டத்தில் இருக்கும் அலட்சியப் போக்கு, உணவு விரையம் மற்றும் பாதுகாப்பான உணவுக்கிடங்குகள் இல்லாமை போன்றவை Global hunger indexயில் இந்தியாவை  முதல் 25 இடங்களில் வைத்துள்ளது.(India(2015) – GHI – 29). India’s Warehousing Development and Regulatory Authorityயின் தகவல் – இந்தியா 13% GDPக்கு நிகரான  உணவைப் பாதுகாப்பாக கூடங்களில் வைக்க முடியாதலால் விரயம் செய்கிறோம் என்கிறது. WHO இந்தியாவின் ஒழுங்கற்ற பொது விநியோகத்தை ‘ஆபத்தானது’ என்கிறது. பசுமைப் புரட்சியில் அடைந்ததாதைக் கருதும் அனைத்தையும் நாம் பல வழிகளில் இழந்து, மக்களைப் பட்டினியாய் வைத்திருக்கிறோம்.

தண்ணீர் அரசியல் உலகத்தில் தொடங்கி 20 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இந்திய மக்கள் அதற்கு விதிவிலக்கல்ல. பொதுப்புத்தியில் குளாய்த் தண்ணீர் அசுத்தமானது என்ற பிரச்சாரத்தில் ஆரம்பித்து தோண்டத் தோண்ட உப்பு நீர் மட்டுமே சுரந்து கொண்டிருப்பது வரைப் பார்த்தாகிவிட்டது. போது சுகாதாரத்திற்குக் கூட தண்ணீர் இல்லாத பல மாவட்டங்கள் தமிழகத்தில் உள்ளன. நகரங்களில் கீழ்த்தட்டு மக்களும் பாட்டில் நீரையே அன்றாடம் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தக் கட்டாயப்படுத்தப் படுகின்றனர். அரசு நீர் மேலாண்மையில் தோல்வியடைந்தது மட்டுமன்றி நீர் அரசியலில் கேட்டிக்காரத்தனமாய் மௌனம் மட்டுமே காட்டுகின்றது. நீரை அறுவடை செய்வதில் சிறு முதல் மாபெரும் முதலை முதலாளிகள் வரை போட்டி. அது நீரின் தரம் மற்றும் அளவைப் பொறுத்து சிறு சண்டையில் இருந்து பெரும் அரசியல் போராய் நடந்து கொண்டே உள்ளது. சாமானியன் வீட்டில் நீர் என்பது – ஆடம்பரமாய் மாறும் நிலை வெகு தொலைவில் இல்லை.

சில முக்கியத் தகவல்கள் –

1 நபர் 1 நாள் தண்ணீர் வபயோகம் இந்தியாவில்(சராசரி) – 52 லிட்டர்
பாசனத்திற்கு நாம் பயன்படுத்தும் நீரின் சதவீதம் (மொத்தமாய்க் கிடைக்கும் நீரில்) – 80% – உலகில் முதல் இடம்
இந்தியாவில் நீரால் ஏற்ப்படும் நோயின் சதவீதம் – 21%
வறுமைக்கோட்டிற்குக் கீழே சுத்தமான நீரின்றி இருப்போர் – 52%
CPCBயின் அனுமானத்தில் மாசுபடிந்த நிலத்தடி நீரின் அளவு – 75-80%
வயிற்றுப்போக்கில் ஆண்டுதோறும் இறக்கும் குழந்தைகள் – 3,15,000

இதனினும் கொடுமையான தகவல்கள் உள்ளன; அவை இந்தியாவை ஆப்பிரிக்காவின் சின்ன ஏழை நாடுகளுடன் ஒப்பிட்டு அதனிலும் கீழே வைக்கின்றது. நம் தண்ணீர் போராட்டம் மறைமுகமாக தினசரி நடந்து கொண்டே இருக்கிறது; ஒரு நாள் நம் கண்முன் வரும் போது – ‘தண்ணீர்’ என்று சொல்லக்கூட எச்சிலற்று இருப்போம்!

நம் வாழ்க்கைத் தரத்தைக் கிழித்துத் தொங்கப்போட மேலும் நிறைய உள்ளது….தொடரும் இரண்டாம் பாகத்தில்…!

 

தகவல் சுரங்கத்தில் – பாகம் 1

“Information is wealth” என்று செந்தில் ஒரு படத்தில் சொல்வார். தனக்குத் தேவையான அனைத்துத் தகவல்களும் தானே திரட்டி வைத்திருந்தால் சுகமாய் வாழலாம் என்று பொருள் பட. சுகபோகியாய் வாழ்ந்தும் இருப்பார் அதில்.நம்மில் பலரும் இதே முன்னைப்புடன் தான் ஓடிக்கொண்டிறிக்கிறோம். ‘என்றோ ஒரு நாள் எல்லா தகவல்களுடன் நிறைந்த செல்வத்துடன் திளைத்திருப்பேன்’ என்ற கனவு. போதாது போதாது என பட்டம் மேல் பட்டம் பெறும் மக்கள் நிறைந்திருக்கும் தேசம்.தொலைக்காட்சி, இணையம், கைபேசி என தொலைதொடர்ப்புக் கருவிகளால் ஒவ்வோர் நொடியும் தகவல் சுரங்கத்தில் இருந்து வாரி இரைக்கப்படும் கோடிக்கணக்கான விவரங்கள். இவற்றை வைத்து நாம் என்னதான் செய்கிறோம்? சரியான தகவல் நமை வந்தடைகிறதா? நித்தம் நாம் எதைத் தான் தேடிக்கொண்டே இருக்கிறோம்?

Info

தேடுதல் – மனிதகுளத்தின் தீரா தாகத்தின் வெளிப்பாடு.கடந்த 2015 ஆம் ஆண்டு இந்தியர்கள் கூகுளிடம் தேடியது என்ன? சுமார் 800 கோடி பேர் வசிக்கும் இவ்வுலகில் நாம் தேடிய முதன்மையான நபர், சன்னி லியோன் என்கிறான் கூகிள். சன்னி தொடர்பான அனைத்து தகவல்களும் பெரும்பான்மையான இணையவாசிகளுக்கு தெரிந்தே இருக்கிறது. சரி வேறு யாரை நாம் தேடினோம் எனப் பார்த்தல் முதல் பத்து நபர் தேடலில் 8 பேர் சினிமா துறையினர். மோடியும் கலாமுமே வேறு துறையைச் சேந்தவர்கள். சினிமா இல்லை என்றால் நம்மில் பலர் செத்தே போவோம் போல.

சரி, தேடிய நபர்கள் வேண்டாம்; வேறு எந்தப் பொருளை/இடத்தைத் தேடினோம்? Flipkart முதன்மையாய் நிற்கிறது. அதனைத் தொடர்ந்து முதல்ப் பத்தில் 3 பிற online வர்த்தக தளங்கள் உள்ளன. 2 வங்கிகள், IRCTC, Railways, cricbuzz மற்றும் whatsapp. ஆகா 8 தேடல்கள் எதோ ஒன்றை வாங்கும் முனைப்புடன் தேடப்பட்டவையே. இது போக, தொலை தொடர்ப்புக் கருவிகளைத் தேடிக் குமித்திருக்கிறோம். குறிப்பாக செல்பேசிகளை. Strategy analytics யின்  ஆய்வறிக்கை, இந்தியா அமெரிக்காவை முந்திச் சென்று 2017 யில் உலகில் இரண்டாம் மிகப்பெரிய Smartphone சந்தையாகும் என்கிறது. சில ஆண்டுகளுக்கு இரண்டிலக்க வளர்ச்சி(?) பெறப்போகும் ஒரே நாடு இந்தியா தான் என்பது நாம் அறிந்ததே. காரணம் – வளர்ந்து வரும் நடுத்தர ஊதியம் பெரும் குடும்பங்கள். இவர்கள், வாங்குபவை விலையுயர்ந்த பொருட்கள் இல்லை. மலிவான, தள்ளுபடி என விற்க்கப்படும் பொருட்களே. பரபரப்பாய் விற்கும் எந்த செல்பேசியும் 6000 முதல் 20,000 வரை மட்டுமே விற்கின்றன. பெரும்பாலும் 3.5 லட்சம் முதல் 5 லட்சம் வரையே கார்கள் விற்கின்றன. வாங்குகிறோம், அதிகமாய் வாங்குகிறோம், தள்ளுபடி என்றால் வாங்குகிறோம்; ஆனால் தரமான பொருட்களை வாங்குவதில்லை(விளக்கம்- பாகம் 2ல்). ஆக செந்தில் கூறுவது போல் எந்த இடங்களில் இன்று தள்ளுபடி, எங்கு இலவசம் கொடுக்கிறார்கள்,  எங்கு கடைதிறப்பில்/மொத்தமாய் மோதும்போது  1 வாங்கினால் இன்னொன்று இலவசம், 250 ரூபாய்க்கு செல்பேசி வாங்குவது எப்படி, சத்யம் திரையில் படம் பார்க்க என்ன செய்ய வேண்டும், IRCTC யில் பயணச் சீட்டு எடுப்பது எப்படி என இணைய வாசிகள் நுகர்வோர்களாய் மட்டுமே இருக்கின்றனர். இவர்கள் நுகர்வுப் பழக்கத்தை இன்னும் ஆழமாக்க, எல்லா  இணைய தளங்களும் விளம்பரங்களை அள்ளித் தெளிக்கின்றன.செய்தித்தாள்களும் மொபைல் appகளும் தொலைக்காட்சியும் இதற்கு விதிவிலக்கு இல்லை. ஆகா, செய்தியோ தகவலோ விளம்பரம் இல்லாமல் நம்மிடம் வந்து சேர வாய்ப்பே இல்லை. நாம் செய்தியைப் பார்கிறோமோ இல்லையோ விளம்பரத்தைப் பார்த்து, நுகர்ந்து கொண்டே இருக்கிறோம். நுகர்தல் ஒரு தேசிய போதையாகிப் போனது.

நுகர்வைத் தொடர்ந்து இந்திய தகவல் பரிமாற்றத்தில் அடுத்த வரிசையில் இருப்பது கேளிக்கை. இதற்கு அளவே இல்லை. ஒரு நாளில் கேளிக்கைக்கு ஒரு சராசரி இளைஞன் 3 மணி நேரமாவது செலவிடுகிறான். எதுவும் கேளிக்கை எல்லாம் கேளிக்கை. இந்திய சமுகம் இன்னும் இளமையாய் இருப்பதினால், இந்த மனப்பாங்கு வழக்கமானதே. ஆனால் இங்கே முன்னெப்போதும் இல்லாத இளமை நிலவுவதால் கேளிக்கை மக்களின் கண்ணை மறைக்கிறது. அரசியலை/அரசியல்வாதிகளை கேளி செய்யலாம் தான். ஆனால் இன்றைய சூழலில் கேளி மட்டுமே செய்கிறோம், அதைத் தாண்டி நம்மில் பலரால் அரசியலைப் புரிந்து கொள்ளவே முடிவதில்லை. சமுக ஊடகங்களுக்கு அரசியலை இளைஞர்களிடம் அறிமுகப்படுத்தியதில் பெரும்பங்கு உண்டு, அதில் மாற்றுக் கருத்தில்லை. என்றாலும், அரசியலின் முதல்ப் படியிலேயே அவர்களை 10 வருடங்களாக வைத்திருப்பதிலும், ஊடகங்களுக்குப்  பங்குண்டு.

எல்லா நிகழ்விற்கும் இன்று memes தான். மழை வெள்ளமா, சுனாமியா, புகம்பமா எதையும் விட்டு வைப்பதில்லை நாம்.சமுக வலை தளங்களில் வருவதைத் தான் இன்று பத்திரிக்கை, தொலைகாட்சி என எல்ல ஊடகங்களும் வெளியிடுகின்றன. மக்களை குதுகலத்தில் வைப்பது மட்டுமே இவர்களது கடமையைக் கருதுக்கின்றனர்.இதன் அடிப்படையில் பல சமயங்களில் செய்திகள் மற்றும் தகவல்களை ‘உருவாக்குகின்றனர்’. ஊடக அறம் என்பதை எல்லாம் கடந்து வந்து வருடங்கள் பல ஆகின்றன.மக்களிடம் உள்ள தொலைத்தொடர்ப்புச் சாதனங்களைக் கணக்கில் கொண்டு ஊடகங்கள் 24 மணி நேரமும் வேலைபார்க்கின்றன. சாதனங்கள் பெருகப் பெருக செய்திகளும் கேளிக்கைகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.

ஒரு சமூகம் என்று கேளிக்கையின் வழியாக மட்டுமே தகவல் பரிமாற்றம் செய்யுமாயின், அது வளர்ச்சியடையாத பக்குவமற்ற சமூகமே. இதே பக்குவமின்மை எல்லா ஊடகத்திலும் பிரதிபலிக்கக் காணலாம். இன்றைய இளைய தலைமுறை மக்கள் தொகையில் பெரும் பகுதியாய் உள்ள .காரணத்தினால் தான், இந்த பக்குவமற்ற நிலை ஆயின்; இன்னும் 20 வருடம் இதுவே நிலை.

இந்தியா இளமை மிடுக்கில் துள்ளுகின்றதோ?…..தொடரும் பாகம் 2யில்.

Shell Scripting

What is a Unix Shell?

A shell is an intermediary program  between an Unix user and the internal working of the operating system. It provides an command line interface, analogous to the Windows DoS for the user to communicate with the Unix kernel.

Kernel is the central module of the operating system which bridges the system hardware to the application software.Image

There are various shells available in Unix environment. The most commonly used shells are Bourne shell (sh) , C shell (csh), TC shell (tcsh), Korn shell (ksh) and  Bourne Again Shell (bash)

Normally in a Unix-based OS two shells C shell and Bourne shell will be installed. Apart from that other shells might also can be installed.

To find out which shell was chosen for you, look at your prompt.

If you have  $ prompt, you’re probably in a Bash, Bourne or  Korn shell.
If you have  % prompt, you’re probably in a C shell.

 

Image

Shell Scripting:

Shell scripting in Linux /Unix is programming with the shell using which you can automate your tasks. A shell script allows you to submit a set of commands to the kernel in a batch. In addition, the shell itself is very powerful with many properties on its own, be it for string manipulation or some basic programming stuff.

Advantages of using Shell Script:
1. Saves time
2. It is not compiled into a separate executable file as a C program is.
Disadvantages:
1. Not fast in comparison to high level languages.
2. Complex code are very difficult to write using shell script.
3. Shell script files uses .sh extension . Shell Scripts are executed in a separate child shell process , and this sub-shell need not to be of same type as your login shell.

Scripting Basics:

How to find the shell you’re currently logged in?

Image

Type “echo $SHELL” in your command line interface; the respective shell script which is currently in use will be displayed.

A shell can perform operations with commands ranging from simple utility invocations like:
$ ls
to complex-looking pipeline sequences like:
$ ps -ef  | sort  | ul  -tdumb  | lp

When these commands put together in a single bundle and made into an executable file, makes a shell script.

 How to write a simple shell script:

1. Use any editor – a ‘vi’ or ‘mcedit’

2. Lets take an example of ‘vi’.  $ vi helloWorld.sh – here helloWorld is the name of the file you are gonna create

3.  Write a simple script as below

HelloWorld

Lines that are starting with ‘#’ are comment lines. ‘echo’ is a unix command to print some text. $USER specifies the current user variable.

‘exit 0’ specifies the status the command that was executed.

(1) If exit’s return value is zero (0), command is successful.
(2) If exit’s return value is nonzero, command is not successful or some sort of error executing command/shell script.

We can specify any negative value to denote various errors that might potentially arise from our script.

4. Now time to  execute the script. You execute the script with ‘./’ command as follows:

HW_Run

Congrats you just ran your first script

Here are some Vi Editor cheat sheet  to play around the editor

Vi editor has two modes:

1. Command mode

2. insertion mode

Initially vi will start will a command mode. Insertion only begins after the insertion or change command. [ESC] brings back us to command mode from insertion mode.

Command Meaning
Insertion
i Insert before cursor
I Insert before line
a Append after cursor
A Append after line
o Open a new line after current line
O Open a new line before current line
r Replace one character
R Replace many characters
Motion
h Move left
j Move down
k Move up
l Move right
w Move to next word
W Move to next blank delimited word
b Move to the beginning of the word
B Move to the beginning of blank delimted word
e Move to the end of the word
E Move to the end of Blank delimited word
( Move a sentence back
) Move a sentence forward
{ Move a paragraph back
} Move a paragraph forward
0 Move to the begining of the line
$ Move to the end of the line
1G Move to the first line of the file
G Move to the last line of the file
nG Move to nth line of the file
:n Move to nth line of the file
fc Move forward to c
Fc Move back to c
H Move to top of screen
M Move to middle of screen
L Move to botton of screen
% Move to associated ( ), { }, [ ]
Deleting Text
x Delete character to the right of cursor
X Delete character to the left of cursor
D Delete to the end of the line
dd Delete current line
:d Delete current line
Quitting
😡 Exit, saving changes (Colon followed by ‘x’)
:q Exit as long as there have been no changes
ZZ Exit and save changes if any have been made
:q! Exit and ignore any changes

To Be continued….