வாழ்க்கைத் தரம் – 1

இந்தியா ஒரு சிக்கலான கூட்டமைப்பு. இச்சமுகத்தில் என்றுமே மக்களின் வாழ்க்கை தரம் சமமாக உயரவோ தாழ்ந்ததோ இல்லை. விவசாய சமுகமாய் இருந்து இன்று சந்தைப்  பொருளாதாரச் சமுகமாய் உருமாறி உலகத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு நாடு, தன் மக்களின் வாழ்க்கைத் தரத்தை  எப்படி வைத்திருக்கிறது?

வாழ்க்கைத் தரம் – உலகம் முழுவதிலும் இன்றும் இது சமமற்றே இருக்கிறது. நாடுகளுக்கிடையே இந்த வளர்ச்சியை Hans Rosling குறிப்பிடும் பொழுது தன் முந்தைய தலைமுறைக்கு கிடைக்காத ஒரு பொருள் இந்தத் தலைமுறைக்கு கிடைத்தால் அதுவே முக்கியமான வளர்ச்சிக் கூறு. மேலும் இந்தத் தரம், குழந்தை இறப்பு விகிதம் குறையும் பொது பெரிதாய் வளர்ச்சி அடிக்கிறது என்கிறார். இவ்விகிதம் பெண்கள் கருவுறும் விகிதத்தையும் நேரடியாய்ப் பாதிக்கும். இந்தியாவின் குழந்தை இறப்பு விகிதம் – உலக வங்கியின் மதிப்பீட்டின் படி ஒவ்வொரு 1000 குழந்தைக்கும் 48 குழந்தைகள் 5 வயதிற்குள் இறக்கின்றன. இது தனியே பார்த்தால் ஆப்ரிக்க நாடுகளுடன் ஒப்பிடும் அளவில் இருக்கிறது (ஆப்ரிக்க நாடுகள் இந்தக் குறியீட்டில் அசுர வளர்ச்சியடைந்திருக்கிறது). ஆனால் நாம் வெகுவாக வளந்திருக்கிறோம். இந்த வளர்ச்சியின் விளைவாய், பெண்கள் கருவுறும் விகிதமும் குறைந்து 2.5ய் உள்ளது.
SoL - Copy

இந்தியாவின் மக்கள் தொகை மேற்கூறிய இவ்விரண்டு கூறுகளால் எளிதில் புரிந்துகொள்ள  முடியும். நம்முடைய மக்கள் தொகையை சுமையாக பார்த்த காலம் மலையரிப்போய், இன்று இளமை ததும்பும் ஒரு நாட்டை, உலக அரங்கில் பெரும் சந்தையாகவும், ஒரு வேலைச் சமுகமாகவும் மாற்றி இருக்கிறது. இந்த மாற்றம் வாழ்க்கைத் தரத்தை பெரிதும் பாதிக்கும். ‘பாதிக்கும்’ என்றால் பாதகமாகவும் மாறலாம்.

Maslow’s hierarchy of needs என்பது ஆபிரகாம் மாஸ்லோ என்ற அமெரிக்கரின் தேவை மற்றும் முன்னேற்றத்திற்கான கோட்பாடு. மனிதம் குறித்தான முக்கியமான கோட்பாடுகளில் இதுவும் ஒன்று. ஒரு சமுகத்தின் வாழ்வாதாரம், முன்னேற்றம் மற்றும் உக்கதிர்க்கும் கூட இந்த பிரமிட்-ஐ உபயோகிக்கலாம்.

மாஸ்லோ இந்த pyramidஐ வடவைமைத்ததன் நோக்கம் வேறு; ஆனாலும் நாம் இதை ஒரு தனி மனித மற்றும் சமுகத்தின் முன்னேற்றம் என்ற ஒரு பரிணாம வளர்ச்சியை ஆராயப் பயன்படுத்தலாம்.

இந்தியாவைக் கீழிருந்து அலசலாம். அடிப்படைத் தேவைகள் நிறவெறியிருக்கிறதா?
உணவுத் தட்டுப்பாடு பசுமைப் புரட்சியில் தீர்ந்தது என்று வாதிடும் அதே நேரத்தில் இந்தியாவில் விவசாயத் தற்கொலைகள் நடந்ததிற்கு கரணம் என்ன என்ற கேள்வியையும் வைத்தே ஆகா வேண்டும். இவை இரண்டும் தொடர்புடையைவையே. இந்தத் தொடர்ச்சியை அரசாங்கங்களும் நிறுவனங்களும் மறுத்தே வரும், அது நேரான விளைவே.  நிலவுடைமை, நிலத்தின் மீதான வரி மற்றும் மோசமான நீர் மேலாண்மை போன்ற ஆங்கிலேய காலத்து காரணிகளைத் தாண்டி விவசாயக் கடன், பூச்சிக்கொல்லிகள் மற்றும் முறையற்ற சந்தை என  புதிய காரணிகளின் அடிமை ஆகிப் போன நம் விவசாயச் சமுகத்தினரே இந்த கடைசித் தளத்தில் முதன்மையானவர்கள். இவர்களில் பெரும்பான்மையானோர் குறு விவசாயிகள் மற்றும் கூலித் தொழிலார்கள். இவர்களது நகர்ப்புறத்து வடிவமாய் எளிய வேளைகளில் மட்டுமே வாய்ப்பளிக்கப்படும் நகரத்திற்கு வசிக்கும்/புலன்பெயர்ந்த தொழிலாளர்கள். ஆதிவாசிகள், பழங்குடியினரும் இந்தத் தளத்தில் வருவர்.

இவர்கள் அனைவருக்கும் உணவு, தண்ணீர், கழிவறை, ஆரம்ப சுகாதாரம், வீடு போன்றவை கிடைத்து விடாதா என்றால் இல்லை. பொது விநியோகத் திட்டத்தில் இருக்கும் அலட்சியப் போக்கு, உணவு விரையம் மற்றும் பாதுகாப்பான உணவுக்கிடங்குகள் இல்லாமை போன்றவை Global hunger indexயில் இந்தியாவை  முதல் 25 இடங்களில் வைத்துள்ளது.(India(2015) – GHI – 29). India’s Warehousing Development and Regulatory Authorityயின் தகவல் – இந்தியா 13% GDPயை உணவை பாதுகாப்பான கூடங்களில் வைக்க முடியாதலால் விரயம் செய்கிறோம் என்கிறது. WHO இந்தியாவின் ஒழுங்கற்ற பொது விநியோகத்தை ‘ஆபத்தானது’ என்கிறது. பசுமைப் புரட்சியில் அடைந்ததைக் கருதும் அனைத்தையும் நாம் பல வழிகளில் இழந்து மக்களைப் பட்டினியாய் வைத்திருக்கிறோம்.

1024px-Maslow's_Hierarchy_of_Needs.svg

மாஸ்லோ இந்த pyramidஐ வடவைமைத்ததன் நோக்கம் வேறு; ஆனாலும் நாம் இதை ஒரு தனி மனித முநேர்த்ரம் மற்றும் சமுகத்தின் முன்னேற்றம் என்ற ஒரு பரிணாம வளர்ச்சியை ஆராயப் பயன்படுத்தலாம்.

இந்தியாவைக் கீழிருந்து அலசலாம். அடிப்படைத் தேவைகள் நிறவெறியிருக்கிறதா?
உணவுத் தட்டுப்பாடு பசுமைப் புரட்சியில் தீர்ந்தது என்று வாதிடும் அதே நேரத்தில் இந்தியாவில் விவசாயத் தற்கொலைகள் நடந்ததிற்கு கரணம் என்ன என்ற கேள்வியையும் வைத்தே ஆகா வேண்டும். இவை இரண்டும் தொடர்புடையைவையே. இந்தத் தொடர்ச்சியை அரசாங்கங்களும் நிறுவனங்களும் மறுத்தே வரும், அது நேரான விளைவே.  நிலவுடைமை, நிலத்தின் மீதான வரி மற்றும் மோசமான நீர் மேலாண்மை போன்ற ஆங்கிலேய காலத்து காரணிகளைத் தாண்டி விவசாயக் கடன், பூச்சிக்கொல்லிகள் மற்றும் முறையற்ற சந்தை என  புதிய காரணிகளின் அடிமை ஆகிப் போன நம் விவசாயச் சமுகத்தினரே இந்த கடைசித் தளத்தில் முதன்மையானவர்கள். இவர்களில் பெரும்பான்மையானோர் குறு விவசாயிகள் மற்றும் கூலித் தொழிலார்கள். இவர்களது நகர்ப்புறத்து வடிவமாய் எளிய வேளைகளில் மட்டுமே வாய்ப்பளிக்கப்படும் நகரத்திற்கு வசிக்கும்/புலன்பெயர்ந்த தொழிலாளர்கள். ஆதிவாசிகள், பழங்குடியினரும் இந்தத் தளத்தில் வருவர்.

இவர்கள் அனைவருக்கும் உணவு, தண்ணீர், கழிவறை, ஆரம்ப சுகாதாரம், வீடு போன்றவை கிடைத்து விடாதா என்றால்…..இல்லை.

பொது விநியோகத் திட்டத்தில் இருக்கும் அலட்சியப் போக்கு, உணவு விரையம் மற்றும் பாதுகாப்பான உணவுக்கிடங்குகள் இல்லாமை போன்றவை Global hunger indexயில் இந்தியாவை  முதல் 25 இடங்களில் வைத்துள்ளது.(India(2015) – GHI – 29). India’s Warehousing Development and Regulatory Authorityயின் தகவல் – இந்தியா 13% GDPக்கு நிகரான  உணவைப் பாதுகாப்பாக கூடங்களில் வைக்க முடியாதலால் விரயம் செய்கிறோம் என்கிறது. WHO இந்தியாவின் ஒழுங்கற்ற பொது விநியோகத்தை ‘ஆபத்தானது’ என்கிறது. பசுமைப் புரட்சியில் அடைந்ததாதைக் கருதும் அனைத்தையும் நாம் பல வழிகளில் இழந்து, மக்களைப் பட்டினியாய் வைத்திருக்கிறோம்.

தண்ணீர் அரசியல் உலகத்தில் தொடங்கி 20 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இந்திய மக்கள் அதற்கு விதிவிலக்கல்ல. பொதுப்புத்தியில் குளாய்த் தண்ணீர் அசுத்தமானது என்ற பிரச்சாரத்தில் ஆரம்பித்து தோண்டத் தோண்ட உப்பு நீர் மட்டுமே சுரந்து கொண்டிருப்பது வரைப் பார்த்தாகிவிட்டது. போது சுகாதாரத்திற்குக் கூட தண்ணீர் இல்லாத பல மாவட்டங்கள் தமிழகத்தில் உள்ளன. நகரங்களில் கீழ்த்தட்டு மக்களும் பாட்டில் நீரையே அன்றாடம் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தக் கட்டாயப்படுத்தப் படுகின்றனர். அரசு நீர் மேலாண்மையில் தோல்வியடைந்தது மட்டுமன்றி நீர் அரசியலில் கேட்டிக்காரத்தனமாய் மௌனம் மட்டுமே காட்டுகின்றது. நீரை அறுவடை செய்வதில் சிறு முதல் மாபெரும் முதலை முதலாளிகள் வரை போட்டி. அது நீரின் தரம் மற்றும் அளவைப் பொறுத்து சிறு சண்டையில் இருந்து பெரும் அரசியல் போராய் நடந்து கொண்டே உள்ளது. சாமானியன் வீட்டில் நீர் என்பது – ஆடம்பரமாய் மாறும் நிலை வெகு தொலைவில் இல்லை.

சில முக்கியத் தகவல்கள் –

1 நபர் 1 நாள் தண்ணீர் வபயோகம் இந்தியாவில்(சராசரி) – 52 லிட்டர்
பாசனத்திற்கு நாம் பயன்படுத்தும் நீரின் சதவீதம் (மொத்தமாய்க் கிடைக்கும் நீரில்) – 80% – உலகில் முதல் இடம்
இந்தியாவில் நீரால் ஏற்ப்படும் நோயின் சதவீதம் – 21%
வறுமைக்கோட்டிற்குக் கீழே சுத்தமான நீரின்றி இருப்போர் – 52%
CPCBயின் அனுமானத்தில் மாசுபடிந்த நிலத்தடி நீரின் அளவு – 75-80%
வயிற்றுப்போக்கில் ஆண்டுதோறும் இறக்கும் குழந்தைகள் – 3,15,000

இதனினும் கொடுமையான தகவல்கள் உள்ளன; அவை இந்தியாவை ஆப்பிரிக்காவின் சின்ன ஏழை நாடுகளுடன் ஒப்பிட்டு அதனிலும் கீழே வைக்கின்றது. நம் தண்ணீர் போராட்டம் மறைமுகமாக தினசரி நடந்து கொண்டே இருக்கிறது; ஒரு நாள் நம் கண்முன் வரும் போது – ‘தண்ணீர்’ என்று சொல்லக்கூட எச்சிலற்று இருப்போம்!

நம் வாழ்க்கைத் தரத்தைக் கிழித்துத் தொங்கப்போட மேலும் நிறைய உள்ளது….தொடரும் இரண்டாம் பாகத்தில்…!

 

Leave a comment